Ramadan 2025

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொழிவு' நிகழ்ச்சி 18-04-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொழிவு' நிகழ்ச்சி 18-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் "சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி. முஹமத் லாயிக் அவர்கள் "நபியுடன் இருக்க என்ன வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி. பர்லின் Misc அவர்கள் "சுவனமே நமது இலக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல துணைச்செயலாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.