Ramadan 2025

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

26-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு



அல்லாஹ்வின் பேரருளால், 

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 26-04-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல் குர்'ஆனில் தடுக்கப்பட்டவைகள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, தமீம் அவர்கள் "உணவின் ஒழுங்குகள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் அவர்கள் "அங்கீகரிக்கப்படாத பிரார்த்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.