Ramadan 2025

சனி, 10 மார்ச், 2012

08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 08-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருத்தீன் அவர்கள் "அஞ்ச வேண்டிய பிரார்த்தனைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அடுத்ததாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "விருந்தோம்பல் " என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "இறுதிப்பயணம் " என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து,இந்தியாவில் திருச்சி-லால்குடியைச் சார்ந்த கிறித்தவ மத சகோதரர் ,மார்ட்டின் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, தனது பெயரை முஹம்மத் என மாற்றிக் கொண்டார்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.