அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹ்வின் பேரருளால்,
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 03-11-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.
துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பின் நிறைவாக "குஅய்பா (ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "உறவுகள் ஓர் அலசல்" என்ற (தொடர்) தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "ஹஜ் பெருநாளின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். காதர்மீரான் அவர்கள் நடத்தினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.