Ramadan 2025

ஞாயிறு, 24 ஜூலை, 2011

21-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 21-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



கத்தர் கஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோ. M. ஷாஜஹான் அவர்கள், "உண்மையான இறைநேசர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


 QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் "சுவர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "ரமலான் நோன்பின் நோக்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை சகோ. அப்துல்கபூர் மற்றும் தஸ்தகிர் இணைந்து நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.