Ramadan 2025

சனி, 28 மே, 2011

26/05/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/05/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் டாக்டர். அஹமத் இப்ராஹீம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள், "மார்க்கத்தின் பார்வையில் வெட்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "சபிக்கப்பட்டவர்கள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 125 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

 

இதே நேரம், குழந்தைகள் அறையில், வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை, சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.


இறுதியாக அறிவிப்புகள் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றன. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி: 44315863
மின்னஞ்சல்: qitcdoha@gmail.com
வலைப்பூ: www.qatartntj.blogspot.com